ஜூன், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூன் 2016

பெயர் சொல்லி அழைக்கப்பட்டிருக்கிறோம்

நான் அவர்கள் பெயர்களை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். மாணவர் பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்களையும் புகைப்படங்களையும், பார்ப்பதில் நேரம் செலவிட்டு அவற்றை எனக்குப் பழக்கப்படுத்திக் கொண்டேன். எனவே அவர்கள் வகுப்பறைக்குள் நுழையும்பொழுது, “ஹலோ ஜெஸிகா” அல்லது “ட்ரெவோர் வரவேற்கிறேன்” என்று கூறுவேன். பெயர் சொல்லி ஒருவரை அழைப்பது எவ்வளவு அர்த்தமுள்ளது என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் உண்மையாகவே ஒருவரைப்பற்றி அறிய வேண்டுமானால் அவர் பெயரை மாத்திரம் அறிந்து கொண்டால் போதாது. அதற்கும் அதிகமாக அவர்களைப்பற்றி அறிய வேண்டியது உள்ளது. நல்ல மேய்ப்பனாகிய இயேசு, நம்மீது அன்பும்,…

நம் வாழ்க்கை முறை

இக்காலத்து வேதாகம மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கூறிய சொற்றொடரை, ஒருவர் மேற்கோள் காட்டிய பொழுது அதிர்ச்சிக்குள்ளானேன். “நம் வாழ்க்கை முறை” என்ற சொற்றொடரைப்பற்றி கூகுளில் நான் தேடிப்பார்த்த பொழுது, மக்கள் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை முறைகள் அச்சுறுத்துபவைகளாக இருப்பதைத் தாங்கள் உணர்வதை மையமாகக் கொண்டே அநேக பதில்கள் கூகுளில் காணப்பட்டது. அவ்வாறு உணரப்பட்ட அச்சுறுத்தல்கள் சீதோஷ்ணநிலை மாற்றம், தீவிரவாதம், அரசாங்கத்தின் அரசியல் போக்கு ஆகியவை ஆகும்.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய, உண்மையில் நமது வாழ்க்கை முறை உண்மையில் எப்படிப்பட்டது? வசதியான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையா? அல்லது இன்னும்…

கடந்த காலத்தை பின்னால் விட்டுவிடல்

கிறிஸ் பேக்கர் பச்சை குத்தும் கலைஞர். அவர் பச்சை குத்தப்பட்டிருந்த வேதனையின் சின்னங்களையும், அடிமைத்தன சின்னங்களையும் கலைநயமிக்க சித்திரங்களாக மாற்ற வல்லவர். அவனிடம் வரும் வாடிக்கையாளர்களில் அநேகர் தீயவழியில் சென்ற கூட்டத்தினர், மனிதரைக் கடத்திச் செல்வதில் அடிமைப்பட்டவர்கள், இவர்களுக்கென அவர்களை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெயர்களையும், சின்னங்களையும், குறியீடுகளையும் அவர்கள் கொண்டவர்கள். கிறிஸ் இப்படிப்பட்ட சின்னங்களை தன் கலைத் திறனால் மிகவும் அழகான உருவங்களாக்கி அவர்கள் தோல்மீது பச்சை குத்தினான்.

கிறிஸ்து பிறர் தோலின்மீது ஏற்படுத்திய மாற்றங்களைப்போல இயேசு நம் ஆத்துமாக்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.…

விலகிச் செல்லுதல் அல்ல

பள்ளி ஆண்டில் ஓரு பருவநிலை முடிந்த தருணத்தில் என் மனைவியும், நானும், 100 கிலோ மீட்டர் (60 மைல்) தூரத்திலுள்ள பள்ளியிலிருந்து எங்கள் மகளை அழைத்து வந்தோம். வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், சற்று வழிவிலகிச் சென்று அருகாமையில் உள்ள கடற்கரை உணவு விடுதியில் சென்று சிற்றுண்டி அருந்தச் சென்றோம். எங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் கழித்துக் கொண்டிருந்த சமயத்தில், கடற்கரையில் அநேகப் படகுகளைக் கண்டோம். பொதுவாக அவை நீரில் அடித்துச் செல்லாதபடிக்கு நங்கூரமிடப்பட்டிருக்கும். ஆனால் ஓர் படவு மாத்திரம், எவ்விதத் தங்கு தடையுமின்றி மெதுவாக,…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

திருப்தியை பற்றிக்கொள்ளுதல்

ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கட்டுரையில், பிரெண்டா என்ற வாசகருக்கு அவர் பதிலளிக்கையில், அவள் தனது இலட்சியத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள் அவளை அதிருப்தி அடையச் செய்ததாக புலம்பினாள். அதற்கான மருத்துவரின் பதில் அறிவுமழுங்கியதாக இருந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் படைக்கப்படவில்லை, "உயிரோடிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமே" என்று அவர் கூறினார். திருப்தி எனும் கைக்கெட்டாத பட்டாம்பூச்சியைத் துரத்துவது நமது சாபம் என்றார். அதை எப்போதும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

மனநல மருத்துவரின் வார்த்தைகளைப் படித்து பிரெண்டா எப்படி உணர்ந்திருப்பாள்? அதற்குப் பதிலாகச் சங்கீதம் 131ஐப் படித்தால் அவள் எவ்வளவு வித்தியாசமாக உணருவாள்? என்று யோசித்தேன். அதன் வார்த்தைகளில், திருப்தியை எவ்வாறு கண்டறிவது என்பதை நமக்கு தாவீது காட்டுகிறார். அவர் மனத்தாழ்மையோடு ஆரம்பிக்கிறார், தனது ராஜரீகமான நோக்கங்களை ஒதுக்கி வைக்கிறார். மேலும் எது முக்கியமெனும் வாழ்க்கையின் ஆழமான கேள்விகளோடு போராடிக்கொண்டிருந்த அவர், அவற்றையும் ஒதுக்கி வைக்கிறார் (வச. 1). பின்னர் அவர் தேவனுக்கு முன்பாக தனது இதயத்தை அமரப்பண்ணினார் (வச. 2), எதிர்காலத்தை அவரது கைகளில் ஒப்படைக்கிறார் (வச. 3). அதின் விளைவு அற்புதமானது: "ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது" என்று அவர் கூறுகிறார். அதாவது "நான் திருப்தியாக இருக்கிறேன்" (வச. 2).

இதுபோன்ற நமது நொறுங்கிய உலகில், திருப்தி என்பது சில நேரங்களில் எட்டாக் கனியாக இருக்கும். பிலிப்பியர் 4:11-13 இல், அப்போஸ்தலன் பவுல் மனநிறைவைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனால் நாம் "உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்" மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் என்று நம்பினால், மனநிறைவு நிச்சயமாகப் பிடிக்க எட்டாக் கனியாகவே இருக்கும். தாவீது நமக்கு மற்றொரு வழியைக் காட்டுகிறார்: தேவனின் சமுகத்தில் அமைதியாக இளைப்பாறுதலின் மூலம் மனநிறைவைப் பெறுவதே அவ்வழி.

சகோதரன் சவுல்

"ஆண்டவரே, தயவுசெய்து என்னை அங்குத் தவிர வேறு எங்கும் அனுப்புங்கள்." சுழற்சிமுறையில் பயிலிடம் மாற்றவேண்டியிருந்த மாணவனாக ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு இளைஞனாக அதுவே என் ஜெபம். எங்குச் செல்வேன் என்று நான் அறியேன், ஆனால் எங்குச் செல்ல விரும்பவில்லை என்று நான் அறிவேன். நான் அந்த நாட்டின் மொழியைப் பேசவில்லை, அதன் பழக்கவழக்கங்கள் மற்றும் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளால் என் மனம் நிறைந்திருந்தது. எனவே என்னை வேறு இடத்திற்கு அனுப்பும்படி தேவனிடம் கேட்டேன்.

ஆனால் தேவன் தம் எல்லையற்ற ஞானத்தால் நான் செல்ல விரும்பாத இடத்திற்குத் துல்லியமாக என்னை அனுப்பினார். அவர் செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மண்ணில் எனக்கு அன்பான நண்பர்கள் இருக்கிறார்கள்.  என் திருமணத்திற்கு என் சிறந்த நண்பர் ஸ்டீபன் அங்கே வந்தார். அவருக்கும் திருமணமாகிவிட்டது.

தேவன் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் அற்புதமான விஷயங்கள் நடக்கும்! அதுபோன்ற ஒரு மாற்றம் இரண்டு வார்த்தைகளால் விளக்கப்படுகிறது: "சகோதரனாகிய சவுலே" (அப்போஸ்தலர் 9:17).

அந்த வார்த்தைகள் அனனியாவிடமிருந்து வந்தவை, சவுலின் மனமாற்றத்திற்குப் பிறகு உடனடியாக அவரது பார்வையைக் குணப்படுத்த அழைக்கப்பட்டவர் (வ. 10-12). சவுலின் கடந்த காலத்தின் வன்முறை காரணமாக அனனியா முதலில் எதிர்த்தார், “உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.” (வச. 13) என்று ஜெபித்தார்.

ஆனால் அனனியா கீழ்ப்படிந்து சென்றார். அவர் மனம் மாறியதால், அனனியா விசுவாசத்தில் ஒரு புதிய சகோதரனைப் பெற்றார், சவுல் பவுலானார், மேலும் இயேசுவைப் பற்றிய நற்செய்தி வல்லமையுடன் பரவியது. உண்மையான மாற்றம் அவரால் எப்போதும் சாத்தியம்!

பாவங்களை களையெடுத்தல்

எங்கள் தாழ்வாரத்தில் தோட்டக் குழாய்க்கு அடுத்ததாக ஒரு தளிர் துளிர்ப்பதை நான் கவனித்தபோது, அதனால் என்னவாகப்போகிறது என்று புறக்கணித்தேன். ஒரு சிறிய களை எப்படி நமது புல்வெளியைக் காயப்படுத்தும்? ஆனால் வாரங்கள் செல்ல செல்ல, அந்த களை ஒரு சிறிய புதரின் அளவு வளர்ந்து எங்கள் முற்றத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதன் தேவையற்ற தண்டுகள் எங்கள் நடைபாதையின் ஒரு பகுதியில் வளைந்து மற்ற பகுதிகளில் முளைத்தன. அதன் அபாயகரமான வளர்ச்சியைப் புரிந்துகொண்ட நான், என் கணவரின் துணையோடு காட்டுக் களைகளை வேருடன் தோண்டி, களைக்கொல்லியைக் கொண்டு எங்கள் முற்றத்தைப் பாதுகாத்தேன்.

அதேபோலவே பாவத்தின் இருப்பை நாம் புறக்கணிக்கும்போது அல்லது மறுக்கும்போது, அதின் அபாயகரமான வளர்ச்சியால் நமது வாழ்வில் படர்ந்து, நமது அந்தரங்கத்தை இருளாக்கிவிடும். பாவமில்லாத நமது தேவனிடம் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாம், பாவங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், அதனால் நாம் "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே" (1 யோவான் 1:7) நடக்கலாம். மனந்திரும்புதலின் மூலம், நாம் மன்னிப்பு மற்றும் பாவத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கிறோம் (வ. 8-10). நமக்காக இயேசுவென்னும் மிகச்சிறப்பாகப் பரிந்துபேசுகிறவர் உண்டு (2:1). அவர் நம் பாவங்களுக்கான இறுதி விலையை மனமுவந்து செலுத்தினார். ”நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற" (வச. 2) அவருடைய ஜீவரத்தமே அந்த கிரயம்.

நம்முடைய பாவம் தேவனால் சுட்டிக்காட்டப்படும்போது, ​​நாம் மறுப்பு, தவிர்ப்பு அல்லது பொறுப்பிலிருந்து விலகுவதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நாம் ஒப்புக்கொண்டு மனந்திரும்பும்போது, நாம் அவரோடும் பிறரோடும் கொண்டிருக்கும் உறவிற்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களை அவர் களையெடுக்கிறார்.